தூக்கத்தில் நடக்கும் வியாதியால் உயிரிழந்த இளைஞன்…!!!

தூக்கத்தில் நடக்கும் வியாதியால் உயிரிழந்த இளைஞன்...!!!

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 25 வயது இளைஞன் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் அறையில் இருந்து ஜன்னல் வழியாக கீழே விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த நபர் வணிக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அவரது பெயர் குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

அவர் வசித்து வந்த அறையில் இருந்த ஜன்னலில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இளைஞன் தூக்கத்தில் பேசுவதையும் நடப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக கட்டிடத்தில் வசிக்கும் இருவர் தெரிவித்தனர்.


இதுபோல் அடிக்கடி தூக்கத்தில் அவர் பேசியபடி நடந்து கொண்டிருப்பதை பார்த்ததாக ஒருவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து அவனது முதலாளி கூறுகையில், அவன் தூங்குவதற்காக அறைக்குச் செல்வான் ஆனால் திடீரென்று பார்க்கையில் அவன் கீழே இருப்பான்.

ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பான்.

மன உளைச்சல் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக அந்த நபரின் நெருங்கிய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg