அட …!!என்ன ஒரு ஆச்சரியம்…!! இரண்டாவது குழந்தையும் தேசிய தினத்தன்று பிறந்ததா…??

அட ...!!என்ன ஒரு ஆச்சரியம்...!! இரண்டாவது குழந்தையும் தேசிய தினத்தன்று பிறந்ததா...??

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு 2 குழந்தைகள் பிறந்துள்ளது.

அதில் ஒரு ஆண் குழந்தை டான் டொக் செங் மருத்துவமனையில் பிறந்தது. இதனால் லியூ யோங்ஃபெங் மற்றும் ஸாங் ஹுய்ஸியன் தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையும் 2021 ஆம் ஆண்டு தேசிய தினத்தன்று பிறந்ததாக கூறப்படுகிறது.

இப்போது தங்களது 2வது குழந்தையும் தேசிய தினத்தில் பிறந்துள்ளதால் தம்பதியினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதேபோன்று தேசிய தினத்தன்று இன்னொரு பெண் குழந்தை கேகே மகளிர் சிறார் மருத்துவமனையில் பிறந்துள்ளது.