ஏன்?இன்னும் கல்யாணம் ஆகவில்லை என கேள்வி கேட்ட முதியவரை தீர்த்துக் கட்டிய நபர்!!

ஏன்?இன்னும் கல்யாணம் ஆகவில்லை என கேள்வி கேட்ட முதியவரை தீர்த்துக் கட்டிய நபர்!!

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் 45 வயதுடைய பார்லின்டுங்கான் சிரெகர்,60 வயதுடைய அஸ்கிம் இரியாந்தோ ஆகியோர் இருவரும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்.

ஜூலை மாதம் 29-ஆம் தேதியில் பார்லின்டுங்கான் சிரெகர் என்பவர் அஸ்கிம் என்பவரை கொன்றதாக இந்தோனேசியாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த தினத்தன்று பார்லின்டுங்கான் சிரெகர் என்பவர் அஸ்கிம் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பலகையை எடுத்து அவரை அடிக்க ஆரம்பித்ததாக போலீசார் விசாரணையில் அவரது மனைவி கூறியுள்ளார்.

மேலும் அஸ்கிம் தாக்குதலில் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் பார்லின்டுங்கான் விடாமல் துரத்தி சென்று அவரின் தலையில் ஓங்கி அடித்ததார்.சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் பார்லின்டுங்கானை தடுத்தி நிறுத்தினர்.

ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம் குறித்து பார்லின்டுங்கானிடம் விசாரணை நடைபெற்றது.

ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என திரும்ப திரும்ப அவரை அஸ்கிம் கேட்டதாகவும்,அதனால் அவர் ஆத்திரமடைந்தாகவும் கூறினார்.அவரை கொலைச் செய்ய முயற்சித்ததாக திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் நடந்த ஒரு மணிநேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என kompas செய்தித்தாளில் குறிப்பிட்டுள்ளது.

Detik Jogja செய்தித்தளத்தில்,அவர்கள் இருவரும் வளர்க்கும் கோழிகள் மற்றவரின் கூட்டத்திற்கு சென்ற போது சண்டையிட்டதாக கூறியுள்ளது.