சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..????

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரச்சாரம் செய்வதற்கு மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அமைதி காத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டது.
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரச்சாரம் செய்வதற்கு மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அமைதி காத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டது.
பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்:
📌 மக்கள் சக்தி கட்சி, தெம்பனிஸ் குழுத்தொகுதி தெமாசெக் தொடக்கக் கல்லூரி
📌 பாட்டாளிக் கட்சி, செங்காங் தொகுதி – தி வெல்ஸ் அருகிலுள்ள மைதானம்
📌 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – சுவா சூ காங் மைதானம்
📌 சிங்கப்பூர் முற்போக்கு கட்சி, மேரிமவுண்ட் தனித்தொகுதி – கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி
📌 மக்கள் செயல் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழு தொகுதி – உட்லேண்ட்ஸ் அரங்கம்
இந்தப் பகுதிகளில் அதிக மக்கள் கூடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பேரணிகளில் கலந்துகொள்பவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
பெரிய பைகள் அல்லது ஆயுதங்கள் அல்லது கண்ணாடி பாட்டில்கள் போன்ற ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுத் தேர்தலுக்கான நேரடி பிரச்சார பேரணிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan