Eunos குடியிருப்பில் நடந்தது என்ன?? கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கொடூர சம்பவம்!!

சிங்கப்பூர் , Eunos-யில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வீட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக் 35 இல் வசித்து வந்ததாக கூறப்படும் ஒரு பெண் (35) மற்றும் அவருடைய ஒருவயது பெண் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர்.அவர்கள் இருவரும் தாய், மகள் என்று நம்பப்படுவதாக Lianhe Zaobao சீனா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சம்பவம் நவம்பர் 5 அன்று நடந்துள்ளது .மேலும் இதன் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீஸார் , குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 12.40 க்கு மேல் இந்த சம்பவம் நடந்ததாகவும் , திடீர் என்று ஒரு சத்தம் கேட்டதை அடுத்தே அவர்கள் வெளியில் வந்து பார்க்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்தபடி இருவரும் இறந்து கிடந்ததாக அங்கு இருந்தவர் Lianhe Zaobao விடம் கூறினார்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், சந்தேகிக்கும் வகையில் எந்த காரணமும் கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.