என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!!

என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!!

இந்திய திரைப்பட நடிகர் மிஸ்ரா அப்பாஸ் அலி 1975 ல் சென்னையில் பிறந்தார். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.1996ல் இவர் நடித்த ‘காதல் தேசம்’ படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து மின்னலே,பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஐஸ்வர்யா ராயுடன்’ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் பாயான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

அப்பாஸ் கடைசியாக மலையாளத்தில் 2016ல் வெளியான ‘பச்சை கள்ளம்’ படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஹார்பிக் விளம்பரம் முதலியவற்றில் நடிக்கும் அளவிற்கு அவரது மார்க்கெட் குறைந்தது. இவர் 2001 ல் எராம் அலி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு எமிரா என்ற மகளும், அய்மான் என்ற மகனும் உள்ளார். அப்பாஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் அவரின் சினிமா வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அப்போது சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டது. அதில் ஒன்று நடிகை சிம்ரன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஏற்பட்டு காதலாக மாறியதாக செய்திகள் வெளியாகின.சிம்ரன் இருந்தால் நடிப்பேன் என்று கூறியது உண்மையா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அப்பாஸ் சிம்ரனை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் நாங்கள் இருவரும் மூன்று படங்களில் ஒன்றாக வேலை செய்துள்ளோம்.

இருவரும் தொடர்ந்து படத்தில் நடித்த போது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் காதல் செய்யும் அளவிற்கு செல்லவில்லை. இடையில் யாரோ வந்ததே இதற்குக் காரணம். அவர் யார் என்று நான் சொல்ல மாட்டேன். இருவரும் திருமணமானவர்கள். எனவே, இப்போது அதைப்பற்றி பேச வேண்டாம் என்று அப்பாஸ் கூறினார். அந்த நபர் யார் என்று விசாரிக்கையில் அவர்தான் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.