சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயரக்கூடும்!!

சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயரக்கூடும்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாகன உரிமை சான்றிதழ் கட்டணம் மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

மின்சார கார்கள், குறிப்பாக சீனாவில் இருந்து மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சாரக் கார்கள் சிங்கப்பூர் சந்தையில் நுழைய முயற்சித்து வருகின்றன.

இந்த ஆண்டின் முதல் பாதியில், சிங்கப்பூரில் புதிதாக பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவின் BYD நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் சொகுசு மின்சாரக் கார்களை அறிமுகப்படுத்த BYD திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.