வீடு புகுந்து மில்லியன் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்!!

வீடு புகுந்து மில்லியன் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்!!

சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் உள்ள கெய்ர்ன்ஹில் பகுதியில் உள்ள வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது. சுமார் $6.2 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக காவல்துறை ஜுலை4 ஆம் தேதி தெரிவித்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

திருட்டு சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை நடத்தியது.

திருட்டில் ஈடுபட்டு நபரை காவல்துறை ஒரே நாளில் கண்டறிந்தது.

திருட்டில் ஈடுபட்ட 30 வயதுடைய நபரை அடையாளம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து $46,200 மதிப்புள்ள ஹண்ட் பேக்,ரத்தினக்கல் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரம்,ஒரு ஸ்னீக்கர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

அவர் மீது வழக்கு தொடரப்பட்டு குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நீருபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் மற்றும் அபாரதமும் விதிக்கப்படலாம்.