நிலச்சரிவில் புதைந்த வேன்!! காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரம்!!

நிலச்சரிவில் புதைந்த வேன்!! காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரம்!!

வட வியட்நாமில் பலத்த மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் 16 இருக்கைகள் கொண்ட வேன் பாக் மீ மாவட்டம் வழியாக செல்லும்போது நிலச்சரிவில் புதைந்தது.
அதில் 7 பேர் உயிரிழந்ததாக ஜூலை 13-ஆம் தேதி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுவன் உட்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று பேர் தனி வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.

அவர்களின் நிலைமை என்னவென்று சரியாக தெரியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வியட்நாம் மலைப் பாதைகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது.

மீட்பு பணியினர் வேன் புதைந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.