சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய திட்டம்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருவள்ளுவர் கலாசார நிலையம் சிங்கப்பூரில் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

அறம், பொருள் , இன்பம் என முப்பால் கலந்த வள்ளுவரின் குறள்கள் அனைத்தும் இக்காலத்துக்கு மட்டுமில்லாது எக்காலத்துக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.

அது மட்டும் இன்றி , சிங்கப்பூரில் கட்டப்போகும் வள்ளுவரின் கலாசரா நிலையமானது தமிழ் மொழியின் சிறப்பையும் தனித்துவதையும் எடுத்துக்கட்டும் முறையில் அமைக்கப்படிருக்கும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் திரு வோங் அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டு நாட்கள்(செப்டம்பர் 4,5) சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது நடந்த சந்திப்பில் தான் வள்ளுவரின் கலாசார நிலையம் சிங்கப்பூரில் கட்டப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

மேலும் இருநாடுகளுக்கிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.