மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை!!

மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை!!

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி Clementi NorthArc திட்டத்தின் கட்டுமான பணிக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.

அங்கு சேதமடைந்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் மறுசீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு உலு பாண்டான் பூங்கா இணைப்பு பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Clementi NorthArc தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளைக் கொண்டுள்ளது.அங்கிருந்து பூங்கா இணைப்பு பாதைக்கு நான்கு வழியில் செல்லலாம்.

மேலும் அந்த பகுதியின் பரந்த சரிவுகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.