கட்டுமான தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு…!!!

கட்டுமான தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு...!!!

சிங்கப்பூர்: லெந்தோர் அவென்யூ வடக்கு-தெற்கு பாதையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அங்கு கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் கனரக இயந்திரத்திற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து நேற்று (செப்டம்பர் 17) மதியம் 1.30 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இரு அடுக்கு மின்கம்பங்களில் ‘வின்ச் டிரம்’ இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள், தவறி விழுந்து காயமடைந்தனர்.

ஒரு ‘வின்ச் டிரம்’ என்பது கனமான பொருட்களைத் தூக்க அல்லது இழுக்க பயன்படுத்தப்படும் கம்பி கயிறுகளை வீசப் பயன்படும் இயந்திரம்.

இந்த விபத்தில் 39 வயதான பங்களாதேஷ் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் 3 பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் 38 வயதான ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இருவர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தரைவழிப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் சிங்கப்பூர் VSL நிறுவன ஊழியர்கள் என
தெரிய வந்துள்ளது.

இது குத்தகை நிறுவனமான சாங்யாங் பொறியியல் மற்றும் கட்டுமானத்தின் துணை நிறுவனமாகும்.

இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த தரைப் போக்குவரத்து ஆணையம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Follow us on : click here ⬇️