முகமூடி அணிந்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள் !!

முகமூடி அணிந்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள் !!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் முகமூடி அணிந்த இரண்டு பேர் திடீரென்று தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவம் ஜனவரி 28ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.