சிங்கப்பூரில் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் இரண்டு பேர் கைது செய்தனர்!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் இரண்டு பேர் கைது செய்தனர்!!

சிங்கப்பூரில் மார்ச் 5ஆம் தேதி அன்று மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 54 வயது மற்றும் 29 வயதான இரண்டு பேரை அவர்கள் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் $366,700 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருவரிடமும் போதைப்பொருள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.