திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!!

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!!

திருமயம் அருகே குழிபிறையில் 9.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் குறைவான மின்னழுத்தம் நிலவுவதாகவும் அதனை சரிசெய்ய இரண்டு மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் அவர்களிடம் குழிபிறை ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனை நிறைவேற்றும் பொருட்டு 63 kva/ 11 kva திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இது மூலம் குழிபிறை கிராமத்தில் 95 வீட்டு இணைப்புகளும் 110 வணிக இணைப்புகளும் 1 மேல்நிலைதேக்கத்தொட்டி மின் இணைப்பும், ஒரு ரைஸ் மில் மின் இணைப்பை கொண்டவர்களும் பயன்பெறுவர் என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.