காக்கி புக்கிட் தீ விபத்தில் இருவர் பலி…!!

காக்கி புக்கிட் தீ விபத்தில் இருவர் பலி...!!

சிங்கப்பூர்:காக்கி புக்கிட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நேற்று(செப்டம்பர் 19) மதியம் 12.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​தொழிற்சாலை கட்டிடத்தின் 5வது தளத்தில் தீப்பிடித்து எரிந்ததாக கூறியது.

சுயநினைவின்றி காணப்பட்ட இருவருக்கு அவசர உயிர்காக்கும் உதவி வழங்கப்பட்டு சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.