கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!!
அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது கைதிகளை பரிமாற்றிக் கொண்டது.
ரஷ்யா தான் தடுத்து வைத்திருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணை விடுவித்துள்ளது.
அதேபோல அமெரிக்காவும் ஒரு ரஷ்ய குடிமகனை விடுவித்துள்ளது.
உக்ரைனில் போர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளித்ததற்காக ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் சேனியா கேரலினா கைது செய்யப்பட்டார்.
அவர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றிருப்பதால், ரஷ்ய அரசாங்கம் அவரை ஒரு தேசத் துரோகி என்று குற்றம் சாட்டியது.
அர்த்தர் பெட்ரோவ் என்ற ரஷ்ய நபர் அமெரிக்காவில் உளவுத்துறை முகவராக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த முந்தைய கைதிகள் பரிமாற்றத்தில் 24 பேர் விடுவிக்கப்பட்டனர்.
பனிப்போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan