சிங்கப்பூரின் புலாவ் ஹந்துவில் இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!!

சிங்கப்பூரின் புலாவ் ஹந்துவில் இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!!

சிங்கப்பூரின் புலாவ் ஹந்துவில் இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இந்த சம்பவம் மார்ச் 2ஆம் தேதியன்று மதியம் 1:30 மணி அளவில் நடந்தது.

இரண்டு படகுகளும் மோதிக் கொண்டதில் 5 பேர் கடலில் விழுந்தனர்.

அவர்களில் நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும் ஒருவரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடலோரக் காவல் படையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.