இரட்டை சகோதரர்கள் உலக சாதனை படைக்க முயற்சி செய்து வருகின்றனர்!!!

இரட்டை சகோதரர்கள் உலக சாதனை படைக்க முயற்சி செய்து வருகின்றனர்!!!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இயன் மற்றும் ஸ்டுவர்ட் பேத்தன் ஆகிய இருவரும் உலகின் மிகப்பெரிய பரங்கிக்காயை வளர்த்து உலக சாதனை படைக்கும் வித்தியாசமான சவால் நிறைந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளாக சாதனை படைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அவர்களின் கனவு இந்த வருடம் நினைவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேத்தன் சகோதரர்கள் உழைப்பு, பணம், நேரம் அனைத்தையும் செலவிட்டு இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினர்.

இவர்கள் இதை ஒரு பொழுதுபோக்காக தொடங்கியதாகவும் ஆனால் இதுவே நாளடைவில் லட்சியமாக மாறியதாகவும் கூறினர்.

மேலும் நாலு பரங்கிக்காய்களை சவாலுக்கு தயாராக வைத்திருக்கின்றனர் என்றும் கூறினர். அவை ஒவ்வொன்றும் 1500 கிலோ எடையை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மொத்த எடை ஒரு காரின் எடைக்கு சமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை மிகப்பெரிய பரங்கிக்காயின் எடை 1246.9 கிலோ என்று உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இவர்கள் வைத்திருக்கும் பரங்கிக்காயின் எடை 1500 கிலோ வரை உள்ளதால் இவர்களின் உலக சாதனை படைக்கும் கனவு நினைவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here ⬇️