தாய்லாந்தில் சிங்கப்பூர் இளம் காற்பந்து வீரர்களுக்கு பயிற்சி !!

தாய்லாந்தில் சிங்கப்பூர் இளம் காற்பந்து வீரர்களுக்கு பயிற்சி !!

சிங்கப்பூர் கால்பந்து வீரர்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி..
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் இளம் கால்பந்து வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள புதிய வாய்ப்புகளைப் பெறவிருக்கின்றனர்.

கால்பந்து வீரர்கள் தாய்லாந்தில் பயிற்சி பெறுவதன் மூலமும், அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதன் மூலமாகவும் அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அவர்களுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் SportSG, சிங்கப்பூர் கால்பந்து சங்கம் மற்றும் தாய்லாந்தின் BG Pathum United ஆகியவை இணைந்து கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள இளம் கால்பந்து வீரர்கள், தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்ததாகக் கருதப்படும் ஒன்றான தாய்லாந்து அணியின் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெளிநாட்டு அனுபவமானது வீரர்களுக்கு பயிற்சியில் கவனம் செலுத்த உதவும் என்று தெரிவித்துள்ளது.

இத்தகைய முயற்சிகள் அணி பிணைப்பை வலுப்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.