சொகுசு கப்பலில் இருந்து விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

பிரிட்டனின் சவுதாம்டன் நகருக்கு சொகுசுக் கப்பல் சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் மாயமானதாக MSC Virtuosa சொகுசு கப்பல் தெரிவித்தது.

அந்த பெண்ணைத் தேட தகவல் கொடுக்கப்பட்டது.அந்த பெண் சொகுசு கப்பல் பிரிட்டனின் சேனல் தீவுகளுக்கு அருகே விழுந்தார்.

கடலிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவரை பிரெஞ்சு தேடல், மீட்பு பணிக் குழு மீட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.இச்சம்பவம் குறித்து பிரெஞ்சு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.