சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இருவருக்கு நேர்ந்த விபரீதம்!!

டிசம்பர் 22-ஆம் தேதி ( நேற்று) ஜொகூரில் உள்ள தஞ்சோங் குப்பாங்கின் டோல் கேட்டில் விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மலேசியா காவல்துறை தெரிவித்தது.

லாரியுடன் மோதியதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வேலை பார்ப்பதற்காக இருவரும் வந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த விபத்தால் அவர்கள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.