மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

மலேசியாவின் சபாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர் மீன் வலையில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்மணி பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மீன் பிடிக்கச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 12:30 மணியளவில் அவரது உடல் மீன் வலையில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியின் உடலில் காயங்கள் மற்றும் விலங்குகள் தாக்கியதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

மேலும் அந்த மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மழைக்காலத்தில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.