சாகசத்திற்கு சென்ற ஸ்கைடைவருக்கு நேர்ந்த சோகம்!!

சாகசத்திற்கு சென்ற ஸ்கைடைவருக்கு நேர்ந்த சோகம்!!

தாய்லாந்தின் பட்டாயா நகரில், பாராசூட் செயல் இழந்ததால் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் ஒரு ஸ்கைடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 27ஆம் தேதி அன்று 29 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இருந்து குதிக்கும் போது அவரது பாராசூட் வேலை செய்யாததால் இந்த விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர் மரத்தில் மோதி கீழே விழுந்ததாக அவர்கள் கூறினர்.

இச்சம்பவம் குறித்து இரவு 7:30 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் செய்யவிருந்த சாகசத்தை வீடியோ எடுக்க காத்திருந்த நண்பரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.