நியூயார்க்கில் பூங்காவை ரசிக்க சென்ற இடத்தில் சிங்கப்பூரருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த Nur Aisyah தனது கணவர் Abdul Mohd Said – உடன் சேர்ந்து Minnewaska தேசிய பூங்காவிற்கு சென்றிருந்தார். அந்த பூங்கா அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் அமைந்துள்ளது.

அங்குள்ள 30 மீட்டர் உயரமுள்ள பாறையில் இருந்து ஆயிஷா தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.அவரின் உயிரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அவர்கள் இருவரும் இணைந்து Noble Sky International என்ற சொத்து முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.

ஆயிஷாவின் குடும்பத்திற்கு சிங்கப்பூர் துணை தூதுரகம் உதவி வருவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.