சிங்கப்பூரில் சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் உட்பட மூன்று பேர் கைது!! மரண தண்டனை விதிக்கப்படுமா?

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் உட்பட மூன்று பேர் கைது!! மரண தண்டனை விதிக்கப்படுமா?

ஜனவரி 29ஆம் தேதியன்று போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு பெண் உட்பட மூன்று சிங்கப்பூரர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் $470,000 என்று மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை கடத்துவது சட்டப்படி குற்றம் ஆகும்.

இந்த கடத்தல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

250 கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும்.