விமானியாக விரும்புவோர் இனி ஆறாண்டுகள் காத்திருக்க தேவையில்லை!!

நீங்கள் விமானியாக வேண்டுமா? அதற்கு இனி ஆறாண்டுகள் காத்திருக்க வேண்டாம்.நான்காண்டுகளில் வர்த்தக உரிமத்தைப் பெறலாம்.அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அதற்கான பாடத்திட்டத்தை வழங்கும்.மேலும் மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பையும் படிக்கலாம்.

இந்த புதிய திட்டம், விமானத்துறையின் மீட்சி எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகையாக பாடத்திட்டம் வழங்கப்படுவது சிங்கப்பூரில் இதுவே முதன்முறை.பல்கலைக்கழகம் சிங்கப்பூர் விமானி பயிற்சி கல்லூரியுடன் இணைந்து அந்த முயற்சியை எடுத்துள்ளது.

விமானிப் பயிற்சி கல்லூரியில் உள்ள அதே முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

முதல் தொகுதியில் சுமார் 25 மாணவர்கள் இடம் பெறுவார்கள்.