இதுதான் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வதோ!!

இதுதான் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வதோ!!

சிங்கப்பூரில் ஜூன் 13-ஆம் தேதி அன்று கார்பார்க் கேன்ட்ரி தடுப்புகளை அகற்றியதாக கியூ ஆ ஹிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த வீடியோவை அவரை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.அவரின் அடையாளங்களைக் கண்டறிந்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மலேசியர் கியூ ஆ ஹிங் வயது 46 பயனியரில் உள்ள புரோ ஸ்ட்ரீட்டில் உள்ள வெஸ்ட் கனெக்ட் கட்டிடத்தில் பேனாக் கத்தியை பயன்படுத்தி 4 தடுப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள கியான் ஹெங் டிரக் பாடி பில்டர் வளாகத்தில் அவற்றை பதுக்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த தினத்தன்று உலோக கட்டரை பயன்படுத்தி இரண்டு சக்கர கவ்விகளை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் மொத்த மதிப்பு $500 ஆகும்.

ஜூன் 12-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் ஜூன் 27ஆம் தேதி கியூவின் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.