சிங்கப்பூரில் கோவில் உண்டியலில் கைவரிசை காட்டிய திருடர்கள்……

சிங்கப்பூரில் உள்ள Taoist கோயில் உண்டியலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று நடந்தது.

இந்த சம்பவத்தால் கோவில் நிர்வாகம் கதவுகளின் பூட்டை மாற்ற போவதாக தெரிவித்தது. சனிக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் கோவிலின் கதவுகளின் பூட்டை இரண்டு பேர் எடுப்பது போன்ற காட்சி கேமரா பதிவில் பதிவாகி இருந்தது. அந்த நேரம் கோவில் மூடப்பட்டிருந்தது.

பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இருவரும் கோவிலுக்குள் யாரும் இல்லை என்பதை அறிந்ததும் உண்டியலில் பணம் உள்ளதா?என்பதை தெரிந்துகொள்ள டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளனர்.

அவர்கள் ஒரு நீண்ட குச்சியில் நாடவை பயன்படுத்தி உண்டியலில் உள்ள பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அங்கே வசிக்கும் ஒரு பெண் கமிட்டி உறுப்பினர் அவர்களைப் பார்த்தார். அவர்கள் கோவில் உண்டியலில் பணம் திருடுவதை கண்டார். கமிட்டி உறுப்பினரை பார்த்ததும் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.