அலுவலக கதவில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை ஒலியால் சிக்கிய திருடன்..!!!

அலுவலக கதவில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை ஒலியால் சிக்கிய திருடன்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தில் திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் 29 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் ஆகஸ்ட் 24 மதியம் 12.10 மணியளவில் நடந்துள்ளது.

36 ராபின்சன் சாலையில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நுழைந்து திருடுவதற்காக அந்த நபர் நுழைவாயிலை தாக்கி உடைக்க முயன்றார்.

அப்போது திடீரென எச்சரிக்கை சிக்னல் ஒலித்தது. அலுவலகத்தின் நுழைவாயில் சுருள் கதவைச் சிதைத்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

சிக்னல் ஒலித்ததும், அந்த நபர் ஓடிப்போய் காலி இடத்தில் ஒளிந்து கொண்டார்.

உடனே சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து உலோக கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த நபர் இன்று (ஆகஸ்ட் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும்,அபராதமும் விதிக்கப்படலாம்.