வாடகை காரை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த இளைஞன்!! சுமார் 400 மீட்டர் துரத்தி சென்று கைது செய்த போலீஸ்!!

வாடகை காரை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த இளைஞன்!! சுமார் 400 மீட்டர் துரத்தி சென்று கைது செய்த போலீஸ்!!

சிங்கப்பூரில் வாடகை காரை திருப்பித் தராமல் ஏமாற்றிய 29 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கார் வாடகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இந்த சந்தேக நபர் வாடகை காரை திருப்பித் தராமல் ஏமாற்றியதை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிற்பகல் 1.05 மணிஅளவில் காவல்துறையினருக்கு அவர்கள் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த நபர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் சுமார் 400 மீட்டர் தூரம் ஓடிய போது காவல்துறையினர் அவரை துரத்திச் சென்று கைது செய்ததாக தெரிவித்தது.

அந்த நபர் எடுத்துச் சென்ற வாடகை காரை சோதனை செய்ததில் ஆயுதம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த நபர் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.