கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!!

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்...!!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்ட விதம் தற்போது ஆன்லைனில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணியில் பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறந்ததால் அவர்கள் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த காணொளி 7.5 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை இப்படி தொங்கவிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சிலர் விமர்சித்தனர்.

சிலரோ ஊழியர்களுக்கு பாடம் கற்பிக்க இதுவே சிறந்த வழி என்று கூறினர்.

பாதுகாப்பு வார் அணியாவிட்டால் ஏற்படக்கூடிய விபத்துகளுக்கான சாத்தியக்கூறுகளுடன் ஒப்பிடும்போது தண்டனை கடுமையானதல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஊழியர்களை இவ்வாறு நடத்துவது சட்டவிரோதமானது என்று வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.