தென் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி!!

Jelawat சூறாவளி தென் பிலிப்பைன்சில் உள்ள மிண்டனாவ் தீவை தாக்கியது. அதனால் தற்காலிக முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளி தாக்கியதில் ஒருவரை காணவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆற்றில் மிதந்த தேங்காய்களை எடுக்க முயன்ற போது அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அங்கு சூறாவளி தாக்கத்தை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி தாக்கம் குறைந்தாலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முகாம்களை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.