Singapore news

சிங்கப்பூரில் சாதனை அளவை தொட்ட வெப்பநிலை!தணிக்க வந்த மழை!

சிங்கப்பூரில் பல நாட்களாக வெயில் சுட்டெரித்தது. அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் சிங்கப்பூர் வாசிகள் அவதிப்பட்டனர்.அதனை தணிக்கும் வகையில் நேற்று சிங்கப்பூரில் மழை பெய்தது.

நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

வானத்தில் சூழ்ந்த கார்முகில்களை மக்கள் வரவேற்றனர்.

பலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

சிங்கப்பூரில் சனிக்கிழமை (மே-13-ஆம் தேதி) 37 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது.

40 ஆண்டுகளுக்குமுன் பதிவான வெப்பநிலை சாதனை அளவை அது எட்டியுள்ளது.

இவ்வாரம் குறுகியகாலத்திற்கு மழை பெய்யக்கூடும் என தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியிருந்தது.