அர்ஜென்டினாவை புரட்டி போட்ட புயல்!!16 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கடுமையான புயல் தாக்கியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதில் அர்ஜென்டினா மற்றும் அதன் அண்டை நாடான உருகுவேயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் நகரின் பல பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

அந்நாட்டு அதிபர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பொது மக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.