தனது தாயை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்ற மகன்!!

தனது தாயை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்ற மகன்!!

சிங்கப்பூரின் சிராங்கூனில், 77 வயது மூதாட்டியை கொலை செய்ய முயன்ற 34 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த நபர், மூதாட்டியின் மகன் என்று கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றதாக தெரியவந்தது.

இச்சம்பவம் ஜனவரி 16ஆம் தேதி அன்று நடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 18ஆம் தேதி அன்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படிகள் வழங்கப்படலாம்.

அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.