நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த கப்பல்!! மீட்கப்பட்ட 12 பேர்!!

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த கப்பல்!! மீட்கப்பட்ட 12 பேர்!!

சிங்கப்பூர் கடற்பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி(நேற்று) தான்சானியா கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் தீப்பற்றி எரிந்தது.அதில் இருந்து 12 பணியாளர்ளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.இச்சம்பவம் பெட்ரா பிரான்கா தீவில் சென்று கொண்டிருந்தபோது நடந்துள்ளது.

மதியம் சுமார் 12.50 மணியளவில் சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையத்திற்கு லேயூர் ஆங்குன் (LA8) என்ற கப்பல் தீ பற்றி எரிவது குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

மீட்கப்பட்டவர்களை சிங்கப்பூர் கடலோர காவல் படையின் கப்பலில் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு உதவுவதற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையின் தீயணைப்பு வீரர்களும், ரோந்து கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் மாசுபாடு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.