மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!!

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!!

நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நார்த் பகுதியில் செயின்ட் அகாடமி யில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது இடிந்து விழுந்தது.

இந்த துயரச் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 69 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் ஆரம்பத்தில் ஏறக்குறைய 120 க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டதாக கூறப்பட்டது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

மூன்று நாட்களுக்கு முன் மழை பெய்ததாகவும், அதன் பின் இச்சம்பவம் நடந்துள்ளதாக குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.