24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழை!! வெள்ள அபாய எச்சரிக்கை!!

24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழை!! வெள்ள அபாய எச்சரிக்கை!!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கனமழை பெய்தது.

24 மணி நேரத்தில் 111 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதனை ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில பகுதிகளில் 200 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக சிட்னியில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் தாமதமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தினர்.