Latest Sports News Online

கிருமி பரவலால் தள்ளி போன திட்டம்!மீண்டும் நடைமுறைக்கு வர விருக்கிறது!

சிங்கப்பூரில் உள்ள செம்பாவாங்கில் டிசம்பர் மாதத்திற்குள் பலதுறை மருந்தகங்கள் திறக்கப்படும்.

அத்திட்டம் கிருமி பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிப்போனது.சுகாதார அமைச்சர் Ong Ye Kung புக்கிட் கென்பரா ஒருங்கிணைந்த நிலையத்தில் புதிய அம்சங்களைத் தொடங்கி வைத்தார். அப்பொழுது அந்த தகவலைப் பற்றி கூறினார்.

ஒரு புதிய பலதுறை மருந்தகம் Tampines North – இல் அக்டோபர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

சுகாதார பராமரிப்புக்கான தேவையை சமாளிப்பதற்காக இன்னும் கூடுதலான பலதுறை மருந்தகங்களைக் கட்ட சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதாவது 2030-ஆம் ஆண்டிற்குள் மேலும் 8 பலதுறை மருந்தகங்களைக் கட்ட திட்டமிடுகிறது.