இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!!

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில் இன்று நான்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப திறன்களை பகிர்ந்துக் கொள்ளுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டு முயற்சி, ஆன்லைன் சேவைகள் போன்றவைகளாகும். மேலும் செமி-கண்டக்டர்கள் எனப்படும் மைக்ரோ சிப் உற்பத்தி துறையில் வலுப்படுத்தவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், மாண்புமிகு ஓய்வு பெற்ற மூத்த அமைச்சர் கோ சோக் தோங் ,மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரையும் சந்திக்க உள்ளார் மேலும் அவரது பயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

 

Follow us on : click here ⬇️