பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!!

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.

தொடக்க கல்வித்துறையில் அரசாணை எண்: 243 மாநில முன்னுரிமையை ரத்து செய்து ஒன்றிய முன்னுரிமை நடைமுறை படுத்த வேண்டும்,
டிட்டோஜாக் அமைப்பு மூலம் 30 அம்ச கோரிக்கையில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற கோரியும்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.