கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கைது செய்த காவல்துறை…!!!!

கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கைது செய்த காவல்துறை...!!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவகம் ஒன்றில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

50 வயதான லாம் ஹொ லியென் என்ற பெண்ணை ஒரு மனநல காப்பகத்தில் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக லாம் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

லாம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தாம்சன் சாலையில் உள்ள நோவெனா ஸ்கொயர் வணிக வளாகத்தில் உள்ள Han’s உணவகத்திற்குச் சென்றிருந்தார்.

அப்போது அவர் திடீரென மேஜையில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டி வாடிக்கையாளர் ஒருவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்தார்.

இதனை உணவக ஊழியர்கள் தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் வருவதற்குள் லாம் உணவகத்தை விட்டு வெளியேறினார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் லாமை அடையாளம் கண்டனர்.

அடையாளம் காணப்பட்ட 9 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் இருந்த கத்தியும் கைப்பற்றப்பட்டது.

கொள்ளை முயற்சிக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது 6 கசையடிகளும் விதிக்கப்படலாம்.

பொதுவாக பெண்களுக்கு கசையடிகள் விதிக்கப்படுவது இல்லை.

Follow us on : click here ⬇️