நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம்!! ஏன்?

பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம் டிசம்பர் 25ஆம் தேதி அன்று 276 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது.

அந்த விமானம் டிசம்பர் 26 ஆம் தேதியன்று காலை இந்தியா வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 21ஆம் தேதி அன்று துபாயிலிருந்து 303 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம், பிரான்ஸின் Vatry விமான நிலையத்தில் தொழில்நுட்ப காரணத்திற்காக தரையிறங்கியது.

அந்த விமானத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் இரண்டு சந்தேக நபர்களை முதலில் அதிகாரிகள் பிடித்து வைத்தனர்.

ஐந்து சிறார்கள் உட்பட, 25 பேர் பிரான்சில் புகலிடம் தேடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.