நடுவானில் ஆட்டம் கண்ட விமானம்!! இன்னும் 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!!

நடுவானில் ஆட்டம் கண்ட விமானம்!! இன்னும் 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடும் ஆட்டம் கண்டதில் பலர் காயமடைந்தனர்.
அதில் ஐந்து சிங்கப்பூரர்கள் உட்பட 60 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருபது நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

38 பேர் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐந்து சிங்கப்பூரர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

6 பேருக்கு மண்டை மற்றும் மூளையில் ஏற்பட்டுள்ளதாகவும், 13 பேருக்கு எலும்புகள் மற்றும் தசைகள் உள்ளிட்ட பிற காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.