அனிமீ ஸ்டூடியோவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்!! தீக்கு இரையான 36 பேர்!!

அனிமீ ஸ்டூடியோவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்!! தீக்கு இரையான 36 பேர்!!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 45 வயதான ஷின்ஜி அயோபா என்ற நபர் கியோடோ அனிமேஷன் என்ற புகழ்பெற்ற அனிம் ஸ்டுடியோவை தீ வைத்து எரித்தார்.

இதில் 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடந்தது.

அந்த நபர், வெறுப்பு காரணமாக ஸ்டுடியோவின் நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி
தீ வைத்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றவாளியும் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாக அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உலக தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.