நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

தாய்லாந்து நகைக் கடைக்கு பொருட்களை டெலிவரி செய்வது போல் நடித்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாத் (சுமார் 60,000 வெள்ளி) மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங் காய் மாவட்டத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளைச் சம்பவத்தின் போது கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.

அந்த நபர் பச்சை நிற உடை அணிந்து கைப்பை ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் 19 தங்கச் சங்கிலிகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.அவற்றில் 13 சங்கிலிகள் கீழே விழுந்தன.

போலீசார் அவரது பச்சை நிற சட்டையையும் ஒரு பையையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை மர்ம நபரை தொடர்ந்து தேடி வருகிறது.