தன் கையை தானே வெட்டி கொண்ட நபர்!!

தன் கையை தானே வெட்டி கொண்ட நபர்!!

தாய்லாந்து நாட்டின் Chiang Mai-ல் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் ஆசியக் கருப்பு கரடி ஒன்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நபரை தாக்கியது.

32 வயதான அந்த நபர் ஒரு வனவிலங்கு தன்னார்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூண்டிற்குள் இருந்த கரடிக்கு உணவளிக்க முயன்றபோது, அது திடீரென்று அவரது கையை கடித்தது.

கையை விடுவிக்க முயன்ற அவர், முடியாததால் பாக்கெட் கத்தியால் அவரது கையை துண்டித்தார்.

அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கரடியை காயப்படுத்தாமல் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட அவரது நல்ல உள்ளத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.