Singapore news

விபத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு உதவாமல் தப்பி சென்ற நபர் கைது!

கெப்பல் ரோட்டில் மே,21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கெப்பல் ரோட்டில் McLaren காரை 43 வயதுடைய நபர் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினார்.விபத்து ஏற்படுத்திய பிறகு,அந்த நபர் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

உடன் இருந்த பயணியை சம்பவ இடத்திலேயே விட்டு சென்று தப்பி சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

விபத்து நடந்த தினத்தன்று இரவு 10 மணியளவில் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற ஓட்டுநரைக் காவல்துறை கைது செய்தது.

28 வயது பெண் பயணியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் விசாரணைக்கு உதவி வருவதாக கூறியது.