நகரும் போது ரயிலின் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற பயணி!!

சிங்கப்பூரில் ரயிலின் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் இது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பயணி ரயிலின் கதவு மூடுவதை நிறுத்த முயற்சிப்பதை அந்த வீடியோ பதிவில் காணலாம்.

ரயில் நகரும்போதும் கதவை திறக்க அந்த பயணி முயற்சித்தார்.

அவரை நிறுத்த ரயில் ஊழியர்கள் சென்றனர். ஆனால், அந்த பயணி அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று SMRT கூறியது.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை நடைபெற்று வருகிறது.